நிறுக்கும் தராசின் மதிப்பீடு
நிறுத்த முடியா தென்னை,
நான் காற்று..
மூலம் சிறிதெனச் சொல்லி
மூலையில் முடக்கலாகா தென்னை,
நான் நதி..
இரவிற்குள் இறக்கி வைத்தாலும்
இருட்டு நெருங்கா தென்னை..
நான் மதி..
எழுத்தினை எரித்திடினும்
எழுந்திடுவேன் மீண்டும் மீண்டும்;
நான் எண்ணம்..
வருந்தாது வளைந்திடுவேன்
உடையாத உள்ளங் கொண்டு
நான் மூங்கில்
அற்ப வலிகளைப் பொறுத்துச்
சிற்பமாய் சிறந்து நிற்பேன்;
நான் நம்பிக்கை…!